24.4.09

பிரபாகரனை கொல்ல உளவுத்துறை சதி

சென்னை, ஏப். 24-

பிரபாகரனை கொல்ல உளவுத்துறை சதி: பழ. நெடுமாறன் அறிக்கை

இலங்கையில் போர் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த காலக்கட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை படுகொலை செய்ய ரா உளவுத்துறைச் சதித்திட்டம் தீட்டியுள்ளது என மிக நம்பகமானத் தகவல் கிடைத்திருக்கிறது.

போர் நிறுத்தத்தை இந்திய அரசு வலியுறுத்த மறுத்து வருவதின் பின்னணி இதுதான் என்பது அம்பலமாகி இருக்கிறது. கடந்த காலத்திலும் பலமுறை பிரபாகரனை ஒழித்து விட ரா உளவுத்துறை செய்த பல முயற்சிகள் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதைப் போலவே இம்முறையும் இச்சதித்திட்டத்தை விடுதலைப்புலிகள் முறியடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

எனவே இச்சதியில் ஈடுபட்டுள்ள ரா அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரதமர் மன்மோகன் சிங் முன் வரவேண்டும். இல்லாவிட்டால் இந்தச்சதிக்கு அவரும் உடந்தை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வர நேரிடும்.

இதன் விளைவாக வரலாறு காணாத வகையில் பெரும் கொந்தளிப்பு தமிழகத்தில் ஏற்படும் என்று நான் எச்சரிக்க விரும்புகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

நன்றி : மாலைமலர்

2 comments:

suresh said...

please change your background color

ஜெட்லி... said...

என் வலைப்பதிவில் உங்கள் பின்னுடத்துக்கு என் நன்றி.
நான் இன்னிக்கு ஒரு நல்லது செஞ்சது மாதிரி பீல் பண்றேன்.
உங்கள்
ஜெட்லி(www.nee-kelen.blogspot.com)