31.8.09

BMW காரை அன்பு பரிசாக பெறுவது எப்படி ...?

ஒரு மாமியார் தன்னுடைய 3 மருமகன்களும் தன் மீது எந்த அளவிற்கு பாசமாக இருகிறார்கள் ஏன் டெஸ்ட் செய்ய விரும்பினாள்.

முதலாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.

உடனே அந்த முதலாவது மருமகனும் குதித்து அவளை காப்பற்றினான்.

மறு நாள் காலை அவனின் வீடு வாசலில் ஒரு அழகிய மாருதி காரை கண்டான்.

மாமியாரும் அவனின் பாசத்தை மெச்சி ஒரு அழகிய மாருதி காரை பரிசாக தந்தாள் என்று அறிந்துகொண்டான் .

கொஞ்ச நாள் கழித்து

ரெண்டாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.

உடனே அந்த ரெண்டாவது மருமகனும் குதித்து அவளை காப்பற்றினான்.

மறு நாள் காலை அவனும் அவன் வீடு வாசலில் ஒரு அழகிய மாருதி காரை கண்டான்.

மாமியாரும் அவனின் பாசத்தை மெச்சி ஒரு அழகிய மாருதி காரை பரிசாக தந்தாள் என்று அறிந்துகொண்டான்

கொஞ்ச நாள் கழித்து

மூன்றாவது மருமகனை அழைத்து கொண்டு படகு சவாரி சென்றாள். நடு வழியில் அவள் திடிரென படகில் இருந்து தண்ணிரில் குதித்தாள்.

உடனே அந்த மூன்றாவது மருமகனும் குதித்து அவளை காப்பாற்றாமல் தண்ணிரில்அவளை சாக விட்டான்.

அந்த அளவிற்கு அவன் பொண்டாட்டி அவனை டார்ச்சர் செய்து வந்தாள். அவளை பெற்ற இவள் சாக வேண்டும் என்று சும்மாவே இருந்துவிட்டான்.

மறு நாள் காலை அவனும் அவன் வீடு வாசலில் ஒரு அழகிய BMW காரை கண்டான்.

அது அவனின் மாமனாரின் அன்பு பரிசு என்று பின்னர் தெரிந்துகொண்டான்.

No comments: